நிம்மதி தேடி
பிறப்பு முதல் மனித வாழ்க்கை என்பது ஒரு நிம்மதி நாடிய பயணம் எனலாம். பிறந்த குழந்தைக்கு முதலாவது தேவைப்படுவது சுவாசம். அதை முறையாகக் கொடுக்காவிட்டால் வாழ்வே நிம்மதியற்றதாக ஆகிவிடும் என்பதை மருத்துவ அறிஞர்கள் நன்கறிவர். அதன் பின் தேவைப்படுவது உணவு. இந்த இரண்டும் சேர்ந்து இன்னும் எத்தனையோ தேவைகளை உருவாக்கி விடும் என்பது உளவியல்.
இப்படியாக, வளர்ந்து நடக்க ஆரம்பித்த மனிதனிடம் தேடல் எனும் அம்சம் வந்து விடும். அந்த தேடலே ஒவ்வொரு குழந்தையையும் வித்தியாசமாக உருவாகச் செய்கிறது.
அதன்பின் சற்று வளர்ந்தவுடன் தொல்லைகள் ஆரம்பிக்கின்றன. தாய் தந்தை, உற்றார் உறவினர், அயல் வீட்டார், நண்பர்கள் என பல்வேறு திசைகளிலிருந்தும் தொல்லைகள் வர ஆரம்பிக்கின்றன. அவற்றில் சில ஊக்கங்களாக இருக்கலாம் இன்னும் சில தாக்கங்களாக இருக்கலாம். அனால் பொதுவில் அவை உறுத்தல்களாகவே அமையும்.
அந்த இயல்புதான் நாம் காணுகின்ற அழகான இந்த உலகை ஆக்கிவிட்டுள்ளது. தொலைதொடர்பு சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், போக்குவரத்து வசதிகள் என இன்னோரன்ன தொழில் நுட்பங்களும், அறிவியல் சாதனைகளும் அவற்றின் விளைவே. அந்த தேடல் இல்லாமல் போகவேண்டுமாக இருந்தால், தொல்லைகள் நீக்கப்படவேண்டும். தொல்லைகள் நீங்கி, தேடலும் இல்லாமல் போய்விட்டாள், நாம் காணுகின்ற இந்த உலகின் அனைத்து முன்னேற்றங்களும் இல்லாமல் போய்விடும். ஆதலால் தொல்லையும், தேடலும் மனித வாழ்வுடன் இன்றியமையாது என்பது முதற்கண் விளங்கத்தக்கது.
ஆனால் அந்த தொல்லைகளும் தேடல்களும் அளவுக்கு அதிகமாகப் போய்விடுவதுவே மனித வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாத அம்சங்களாக ஆகிவிடுகின்றன. எனவே அவரவர் தனது தேடல்களை வரையறுத்துக்கொள்வதும், அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்துத்துக்கொள்வதும், அந்த தேடலையும், தொல்லைகளையும், கட்டுப்படுத்த துணை செய்யும் அல்லவா...............
அதை எப்படிச் செய்யலாம்? அது ஒரு கலை. அதில் தேர்ச்சி பெறுவது அத்துணை இலகுவான காரியமன்று. காரணம் அவ்வாறு தேர்ச்சி பெறுவதற்குத் தடையாக எத்தனையோ காரணிகள் இருப்பதாகும். எனவே முதற்கண் அந்த கலையைக் கற்றுக் கொள்வது எனத் தீர்மானித்துக்கொள்வதை முதற் படியாகக் கொள்ளலாம்.
தொடரும் ,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment
We value your feed back