வறுமை… (தொடர்ச்சி)
வருமையை நாம் எவ்வாறு முகம் கொடுப்பது எனச் சிந்தித்துப் பார்த்தால்………
இன்றயகால வருமை ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணி எமது தேவைகள் பெறுகிக் கொண்டே போவதாகும் எனக் கண்டோம். நாம் வரலாற்றில் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், வீடு என்பது வெறுமனே நாங்கு சுவர்களாவும், வாகனம் என்பது ஒரு மிருகமாகவும், அல்லது ஒரு வண்டிலாகவுமே இருந்தது. ஆனால் இன்று வீட்டில்தான் எத்தனை வகை. வாகனத்தில் தான் எத்தனை வகை. அது மாத்திரமா. வீட்டுத்தளபாடங்களில் தான் எத்தனை வகை. வாகனத்தின் அலங்காரங்களில் தான் எத்துனை அம்சங்கள். இந்த பல்வகைப் பட்ட வீடுகள், வீட்டுத்தளபாடங்கள், வாகனங்கள் என்பனவை தேவை என்ற எல்லைக்கு அப்பாற் சென்று, போட்டி, மற்றும் பெருமை என்ற அடிப்படையில் பலரும் பெற்றுக் கொள்ள நினைப்பதுவே வருமைக்கான அடிப்படைக் காரணமாகும். அதனை மார்க்கத்தின் அடிப்படையில் விளக்குவதென்றால், அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவதற்காக அவைகளைப் பெற்றுக் கொள்வது என்பதை விட்டு விட்டு, மனிதர்களைத் திருப்திப் படுத்துவதற்காக பெற்றுக் கொள்வது என்ற நிலை உருவாகியுள்ளது. இதை அறியாமை என்று சொல்வதை விடவும் அறிவியல் வளர்ந்த காலத்தின் மடமையின் உச்சம் எனச் சொல்லலாம்.
யாரும் தனது “அவ்ரத்தை” மறைப்பது அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவது/ அவனது கட்டலைகளை பின்பற்றுவது என்பதற்காக அல்ல. அதிக விலையுள்ள ஆடைகளை அணிந்து மனிதர்களை திருப்திப் படுத்தவே முயல்கின்றனர் அதாவது மனிதர்கள் மத்தியில் தான் உயர்ந்தவன் என்ற அங்கீகாரத்தை பெற நினைக்கின்றனர். விலை உயர்ந்த ஆடைகள் சிறந்தவை என வைத்துக் கொண்டாலும், நேரத்தை அறிந்து கொள்வதற்காக கையில் கட்டப்படுகின்ற கடிகாரங்களில்தான் எத்துனைவகையும் விதமும். பிறரை தொலைவிலிருந்து அழைத்துப் பேசப் பயம் படும் தொலை பேசியில்தான் எத்துனை வகையும், விதமும். இந்தப் பட்டியில் எண்ணிலடங்காமல் நீண்டு கொண்டே செல்லும் பட்டியல் என்பதை யாரும் நன்கறிவர்.
இப்படியாக தேவையை மீறிய ஆசைகள் எனும் மனோ இச்சைகளுக்கு அடிமைப் பட்டதன் விலைவாக உருவாகிய அதிகரித்த தேவைகளை நிறைவு செய்ய முடியாத வருமை நிலைதான் இன்று பரவலாக காணப் படுகிறது. சரியாகச் சொன்னால் இதை வருமை என்ற வரையரைக்குள் சேர்க்கவே முடியாது (ஒருகாலத்தில் ஆடைக்கு இருந்த பஞ்சத்தை நினைத்துப் பார்த்தால் இது சரியாக விளங்கும்).
இந்த வருமையின் விளைவுகள் இரண்டு. ஒன்று தமது தேவைகளை நிறைவு செய்துகொள்ளக் கூடியளவு வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் தானாக வரியவர்களாக மாறி விடுகின்றனர். மற்றொன்று தமது தேவைகளுக்கு அப்பால் செல்வமும் வசதி வாய்ப்பும் உள்ளவர்கள் பிறருக்கு கொடுக்க முடியாத நிலையுடைய ஏழைகளாக மாறி விடுகின்றனர். இதுதான் இன்றய காலத்தின் வருமையின் யதார்த்தம் என்பதை அழ்ந்து சிந்திப்போர் மறுக்க முடியாது.
உண்பதற்கு இரண்டு பேரீச்சம் பழங்கள் மாத்திரமே இருக்கின்ற போது அதில் ஒன்றை பிறருக்கு கொடுக்கக் கூடியவர்களாக சஹாபாக்கள் இருந்தனர் என்ற கதையைச் சொல்லி, சொல்லி தமனது தேவைகளை கட்டுப் பாடின்றி அதிகரித்துக் கொண்டு, அதனை பூர்த்தி செய்வதன் பின்னால் அலையக் கூடிய நிலையை மார்க்கம் என்றும், அல்லாஹ் ஹலாலாக்கியதை சம்பதிப்பதற்கான முயற்சி என்றும் கட்பனை செய்துகொண்டு வாழும் மனிதர்களின் பரிதாப நிலையை என்னவென்றுதான் சொல்வது. உள்ளதைக் கொண்டு திருப்தி அடைவதே மிகப் பெரும் செல்வம் எனச் சொல்லும் போது அதில் தேவைகளை வரையறுத்துக் கொள்வதும் உள்ளடங்கும் என்பதை எத்துனை பேர்தான் அறிந்து வைத்திருப்பர்.
இந்த வருமைக்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன.
ஒன்று: வசதியுள்ளவர்களும் வசதியற்றவர்களும் தமது தேவைகளை வரையறை செய்து கொள்ள வேண்டும்.
அடுத்தது: வசதியுள்ளவர்கள், தமது தேவைக்கு மேலதிகமாக உள்ள கிடப்பில் போட்டு கிடக்கும் பொருட்கள் அனைத்தையும் தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
அதேவேளை வசதியற்றவர்களும், வசதியாக இருந்து பின்னர் பிரச்சிணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளவர்களும், பிறரது உதவியை எதிர்ப்பார்த்து பிறரிடத்தில் கை நீட்டிக் கொண்டிராது தமது முழுமுயற்சியையும் வெளிப்படுத்தி, ஹலாலானதை தேடுவதில் ஈடுபடவேண்டும். அதைச் செய்தால் அவர் என்ன நினைப்பார், இதைச் செய்தால் இவர் என்ன நினைப் பார் என்ற கற்பணைகளையும், ஷைத்தானின் உபதேசங்களையும் / ஊசலாட்டங்களையும் உதரித்தள்ளி விட்டு, அல்லாஹ் ஹலாலாக்கிய எதையும் செய்து பொருள் சம்பாதிக்க முயற்சிக்கும் மனோ நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தேவைகளை வரையருத்துக் கொள்ளல்:
தேவைகளை வரையருத்துக் கொள்வது என்பது எல்லாக் காலங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்றப் படவேண்டியதொரு முக்கிய அம்சமாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ள ஒரு முக்கிய விடயம்தான் எல்லா சஹாபாக்களை விடமும் மக்களுக்கு அதிகம் கொடை கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பது. அதேவேளை படுத்து எழும்பினால் பாயின் அச்சுகள் உடம்பில் பதிந்திருக்கக் கூடிய ஒரு சாதரன கட்டிலையே அவர்கள் உறங்குவதற்கு பயன்படுத்தினார்கள். இது நபி (ஸல்) அவர்கள் தனது தேவைகளை வரையருத்துக் கொண்டு எப்படி எழிமையாக வாழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதரணமாகும். அதுமாத்திரமல்ல இப்படி தேவைகளை வரயருத்துக் கொண்டு வாழ்வது மிக முக்கியமான சுன்னாவாகும். சுன்னாவை பின்பற்றுவது என்ற பெயரில் பலரும் அர்த்தமற்ற எத்தனையோ செயல்களில் ஈடுபடும் இந்த காலத்தில் தேவைகளை வரையறுத்துக் கொண்டு எழிமையாக வாழ்வது என்ற சுன்னா அதிகம் வழியுறுத்தப் படவேண்டியதாகும். வீடு, வாகனம், திருமனச் சடங்குகள் என்ற பட்டியலை போட்டுக் கொண்டு போனால், அவகளில் எழிமையைக் கடைப்பிடிப்பதனூடக எவ்வளவு செல்வத்தை மிச்சம் பிடிக்களாம், அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் மூலம் எவ்வளவு பிரயோசனமிக்க விடயங்களை தனக்கும் சமூகத்துக்கும் செய்யலாம். இந்த சுன்னவை ஹயாத்தாக்குவது பற்றி நாம் அதிகம் கரிசனை செலுத்த வேண்டும். தாடியை நீளமாக வளர்த்துக் கொண்டு நான் சுன்னாவைப் பின்பற்றுகிறேன் என்று காட்டிக் கொள்வதை விடவும், வசதியிருந்தும் சுன்னாவின் அடிப்படையில் எழிமையக் கடைப்பிடித்து வாழ நான் உள்ளத்தைப் பக்குவப் படுத்திக் கொண்டுள்ளேன் என்று எண்ணக்கூடிய நிலை உருவாக வேண்டும்.
அவ்வாரே வாழ்க்கை வசதி வாய்ப்புக்கள் குறைந்தவர்களும். பிறரைப் பார்த்துப், பார்த்து தமது தேவைகளை அதிகரித்துக் கொண்டு, பிறரிடத்தில் கையேந்தும் நிலையை உருவாக்கிக் கொள்வதை விட்டு விட்டு, தமது தேவைகளை இயன்றளவு வரையருத்துக் கொண்டு அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கையேந்தக்கூடியவர்களாக கண்ணியமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். தொழுகைக்காக தக்பீரைக் கட்டியவுடன் “உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம் என பலமுறை சொல்லி விட்டு” பள்ளிக்கு வெளியே வந்தவுடன் பிறரிடத்தில் கையேந்தும் மனோ நிலை, அல்லது பிறரிடத்தில் உதவிகளை எதிர்ப்பர்க்கும் மனோ நிலை இவர்களுக்கு எப்படி வருகிறது என்பது கேள்விக்குறிய விடயமாகும். ஒன்றில் தொழுகையில் அவ்வாறு பொய்யுரைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது தொழுகையில் சொன்ன அந்த விடயத்தை வாழ்க்கையில் பின்பற்றப் பழகிக் கொள்ள வேண்டும். இறண்டும் கெட்டான் நிலையில் வாழ்வது எந்த விதத்திலும் பயன் தரப் போவதில்லை என்பது நன்கு விளங்கிக் கொள்ளப் படவேண்டும்.
மேலதிகமாக கிடப்பில் போடப் பட்டுள்ள பொருட்களை பகிர்ந்தளித்தல்:
வசதி வாய்ப்புள்ளவர்கள் ஏதோ பல காரணங்களினால் தாம் விலை கொடுத்து வாங்கிய பொருள்களை ஓரிருமுறை பயன்படுத்தி விட்டு அவற்றை தாமும் பயன் படுத்தாமல், பயன் படுத்தக் கூடியவர்களுக்கும் கொடுத்துதவாமல் வீனாக கிடப்பில் போட்டு வைக்கின்றனர். இது சந்தேகத்திற் கிடமின்றி அல்லாஹ் தந்த அருளை துஷ்பிரயோகம் செய்வதாகும். “உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்ய வேண்டாம்,” அல்குர்’ஆன் (7:31) “வீண்விரயம் செய்யக்கூடியவர்களை அல்லாஹ் வெறுக்கிறான்..” (6:141) என்று அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகிறான். ஆனால் இந்த விடயம் பற்றி எத்துனை பேர் அக்கரை காட்டுகின்றவர்களாக உள்ளனர்.
இன்று எத்தனையோ இயக்கங்கள் தங்களுக்கு மத்தியில் போட்டி போட்டுக்கொண்டு மார்க்கப் பணியில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்கள் இந்த அல்-குர்’ஆன் வசனத்தை சமூகம் பின்பற்றக்கூடிய வழிவகைகளை செய்யாமை ஒரு பெரும் குறையே. அதனடிப்படையில் பாவித்த பொருட்களை (2ன் ஹேன்ட்) ஒன்று சேர்த்து தேவையுள்ளவர்களுக்கு விநியோகிக்கும் ஒரு முறை உருவாக்கப் படுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இதுவிடயமாக முதற்கண் பாவித்த பொருட்கள் பற்றி ஒரு பட்டியல் அதாவது யாரிடம் என்ன பொருட்கள் இருக்கின்றன என்ற ஒரு பட்டியல் (டேடா பேஸ்) உருவாக்கப் படவேண்டும். அதன் பின்னர் தேவையுடைவர்கள் அதைப் பார்ர்து தங்களுக்கு தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து கொள்ளும் அமைப்பு ஏற்டுத்திக் கொடுக்கப் படவேண்டும்.
முயற்சி:
இன்று சமூகத்தில் பரவி வரும் வருமைக்கு அடுத்த தீர்வாக முயற்சியைக் கொள்ளலாம். இன்று பரவி வரும் வருமைக்கு முக்கிய காரணம் முயற்சி இன்மையாகும். அது இன்றய / நவீன காலத்தின் ஒரு உளவியல் நோய் என்று சொன்னால் கூட அது மிகையாகாது. நவீன தொலை தொடர்பு சாதனங்கள், குறிப்பாக பேஸ்புக் போன்ற வற்றினூடா பிறரிடத்தில் உள்ள வசதி வாய்ப்புக்களை கண்டறிந்தவர்கள் அவைகளை எண்ணி எண்ணி அங்களாய்த்தவர்களாக, சோர்வடைந்து எதையும் செய்ய முடியாத மனோ நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். இதன் விலைவாக சிறிதாக எதையும் செய்து சாதாரணமாக வாழ்வோம் என்ற மனோ நிலையை இழந்து பெரிதாக செய்ய வெண்டும் என்ற எதிர்ப்பர்பில் எதையும் செய்யாமல் இருந்து விடுகின்றனர். இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம், வளங்களில் சிறந்த வளம் மனித முயற்சியாகும். வளங்களில் சிறந்த வளம் மனித வளம் அந்த வளத்தைப் பயன்படுத்தியே இன்று சீனா உலகித்தில் தலை நிமர்ந்த நாடாக மறியுள்ளது என்பது பொதுவாக சொல்லப் படும் ஒரு விடயமாகும். ஆனால் சீனாவின் உண்மையான வளம் மனித முயற்சியாகும். சீனாவில் இருக்கும் அதிகரித்த மனிதர்கள் ஏனய வளங்களை விழுங்கிவிடும் மனிதர்களாக அல்லாமல் அதிகம் முயற்சியுள்ளவர்களாக உள்ளனர். அதுவே சீனாவின் வளமாகும். (ஐரோப்பியர்களும் இத்தகையவர்களே) இதை பாடசாலை ஆசியர்கள் முதல் கலாசாலை விரிவுரையாளர்கள் வரை சரிவர விளங்கிக் கொள்வதும் அதை, விளக்கிச் சொல்வதும் காலாத்தின் தேவையாகும். அந்த முயற்சியே யாரும் முன்னேர முக்கியமானதாகும். மனித முயற்சியின் விசேடத் தன்மை என்னவென்றால் முயற்சி செய்யச், செய்ய அது விருத்தி அடைந்து கொண்டே செல்லும் என்பதாகும். ஒருமுறை தவறு செய்தால் அதிலிருந்து பாடம் பெற்று அடுத்த முறை சிறப்பாக செய்யக் கூடிய ஒரு விருத்தி மனித முயற்சிக்கு மாத்திரமே இருக்கிறது என்பது யாறு ஆழ விளங்க்கிக் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.
இஸ்லாத்திலும் மனித முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது என்பது யாறும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விடயமாகும். இஸ்லாத்திலே மிக முக்கிய கடமையான, யாரும் செய்வதற்கு ஆவலாக காத்திருக்கும் “ஹஜ்” கடமையில் உள்ள ஒரு அம்சம் “சஃயு” என்பதாகும். “சஃயு” என்றால் தமிழில் முயற்சி என்று பொருள். (அது அன்று ஹாஜர் அம்மையார் அவர்கள் உணவு/தன்னீர் தேடி செய்த முயற்சியைக் குறித்துக் காட்டும் கிரிகையாகும்) அதேபோல் இன்னும் எத்தனையோ குர்’ஆன் வசனங்கள் மனித முயற்சியின் பின்னாலேயே இறைவனின் உதவி உள்ளது என்பதை போதித்துக் கொண்டிருக்கின்றன (பார்க்க அல்குர்’ஆன் 53:39; 19:25, 2:60, 6:117,160 26:63). ஆனால் இன்றய முஸ்லீம்களின் உண்மை நிலையைச் சொன்னால் சுவர்க்கத்துக்கு போகு முன்னரே சுவர்கத்தில் வாழ்வதாக கட்டபனை செய்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. எல்லாம் தனது காலடிக்கு வரவேண்டும். வாழைப் பழத்தை உரித்து வாயில் ஊட்டிவிட வேண்டும் என எதிர்ப்பர்த்திருக்கும் நிலைதான் பரவலாக உள்ளது. இந் நிலை முற்றாக மாறவேண்டும். அதை மாற்ற சமூகத்தில் செல்வாக்குள்ளவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். முயற்சியே அற்ற சோம்பேரிகளாக மாறிவரும் இன்றய சமூகத்தில் எனது உள்ளத்தை அடிக்கடி உருத்தக் கூடிய ஒரு காட்சி என்னவென்றால்: தொலை பேசிகள் அனுமதிக்கப்படாது என்ற விளம்பரத்தையும் தாண்டி, தனது தொலைபேசிகளை பள்ளிவாயலுக்குள் எடுத்துச் செல்லக் கூடியவர்கள், பள்ளிவாயலுக்குறிய கண்ணியம் பற்றி சிறிதும் கவலையின்றி வருகின்ற தொலை பேசி அழைப்புகளுக்கு தொழுத இடத்தில் இருந்து கொண்டே பதிலழிப்பர். அந்த இடத்திலிருந்து சற்று எழுந்து சென்று முறையாக தனது தொலைபேசியை பயன்படுத்த விருப்பமில்லாத அளவு சோம்பேரிகளாக, பள்ளிவாயலின் கண்ணியத்தைப் பாழ்படுத்தக் கூடியவர்களாகவே இவர்கள் உள்ளனர். தொழுகைக்கு வரக்கூடிய, மார்க்கக் கடமைகளை சரிவரச் செய்யக் கூடிவர்களே இப்படியான சோம்பேரிகளாக மாறி வருகின்றனர் என்றால் அதை என்னவென்று சொல்வது? இந்த சோம்பேரித் தனத்திற்கு விரும்பியோ விரும்பாமலலோ முற்றுப்புள்ளி வைக்கப் படவேண்டும். நான் இவர்களிடத்தில் கேட்க விரும்புவது, முஸ்லீம்களாகிய நாம் அல்லாஹ்வின் மாலிகைக்கு கண்ணியம் காட்டாவிட்டால் அந்நியர்களா அந்த கண்ணியத்தைக் கொடுக்கப் போகிறார்கள்……………………………………..?
வாழ்க்கையில் முயற்சியற்று அங்களாய்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்: வருடம் முழுவதும் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக மழை பொழியாது. நாட்டில் எல்லா பாகங்களிலும், ஒரே நேரத்தில் மழை பொழியாது. அது போலத்தான் மனித வாழ்விலும் எல்லாக் காலங்களிலும் எல்லாருக்கும் ஒரேமாதிரியாக வசதி வாய்ப்புகள் ஏற்படாது. எனவே தனக்குறிய காலம் வரும் வரை தன்னால் இயன்ற முயற்சிகளை சோம்பரமின்றியும், யாருக்கும் அஞ்சாமலும் தொடர்ந்தும் செய்து வரவேண்டும். “கத்ர்” என்பது ஒரு முஸ்லிமின் ஈமானின் அம்சங்களின் ஒன்றாகும். அது மனிதனை சோம்பேரியாக்குவதற்கான விடயமல்ல. மாறாக மனிதனை தொடர்ந்தும் முயற்சியுள்ளவனாக ஆக்குவதற்கான போதனையாகும். இறைவன் வகுத்த படியே யாதும் நடக்கும். நாம் நம்மால் இயன்ற முயற்சிகளை தொடர்ந்தும் செய்வோம் என்ற மனோ நிலையும், மன உறுதியும் உள்ளவர்களாக தொடர்ந்தும் உழைக்கக் கூடிய நிலை உருவாகவேண்டும்.
இந்த அம்சங்களை கடைப் பிடிப்பதுடன், அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வதையே இஸ்லாம் போதிக்கிறது. யாரெல்லாம் அவ்வாரு தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களது முயற்சிக்குறிய பலன்களை அல்லாஹ் கொடுத்தருள்வானாக……..!
ஒரு முஸ்லிமின் உண்மை நிலை, அவன் எப்பொழுதும் ஒரு போர் வீரனைப் போல் இருப்பான். எந்த சந்தர்ப்பத்திலும் அல்லாஹ் றஸூலின் கட்டளையை அமுல் படுத்த தயாராகவே இருப்பான். இந்த நிலை சாதாரனமாக வந்து விடாது (ப’இதா பரக்த பன்ஸப்)வறுமை… (தொடர்ச்சி)
வருமையை நாம் எவ்வாறு முகம் கொடுப்பது எனச் சிந்தித்துப் பார்த்தால்………………
இன்றயகால வருமை ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணி எமது தேவைகள் பெறுகிக் கொண்டே போவதாகும் எனக் கண்டோம். நாம் வரலாற்றில் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், வீடு என்பது வெறுமனே நாங்கு சுவர்களாவும், வாகனம் என்பது ஒரு மிருகமாகவும், அல்லது ஒரு வண்டிலாகவுமே இருந்தது. ஆனால் இன்று வீட்டில்தான் எத்தனை வகை. வாகனத்தில் தான் எத்தனை வகை. அது மாத்திரமா. வீட்டுத்தளபாடங்களில் தான் எத்தனை வகை. வாகனத்தின் அலங்காரங்களில் தான் எத்துனை அம்சங்கள். இந்த பல்வகைப் பட்ட வீடுகள், வீட்டுத்தளபாடங்கள், வாகனங்கள் என்பனவை தேவை என்ற எல்லைக்கு அப்பாற் சென்று, போட்டி, மற்றும் பெருமை என்ற அடிப்படையில் பலரும் பெற்றுக் கொள்ள நினைப்பதுவே வருமைக்கான அடிப்படைக் காரணமாகும். அதனை மார்க்கத்தின் அடிப்படையில் விளக்குவதென்றால், அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவதற்காக அவைகளைப் பெற்றுக் கொள்வது என்பதை விட்டு விட்டு, மனிதர்களைத் திருப்திப் படுத்துவதற்காக பெற்றுக் கொள்வது என்ற நிலை உருவாகியுள்ளது. இதை அறியாமை என்று சொல்வதை விடவும் அறிவியல் வளர்ந்த காலத்தின் மடமையின் உச்சம் எனச் சொல்லலாம்.
யாரும் தனது “அவ்ரத்தை” மறைப்பது அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவது/ அவனது கட்டலைகளை பின்பற்றுவது என்பதற்காக அல்ல. அதிக விலையுள்ள ஆடைகளை அணிந்து மனிதர்களை திருப்திப் படுத்தவே முயல்கின்றனர் அதாவது மனிதர்கள் மத்தியில் தான் உயர்ந்தவன் என்ற அங்கீகாரத்தை பெற நினைக்கின்றனர். விலை உயர்ந்த ஆடைகள் சிறந்தவை என வைத்துக் கொண்டாலும், நேரத்தை அறிந்து கொள்வதற்காக கையில் கட்டப்படுகின்ற கடிகாரங்களில்தான் எத்துனைவகையும் விதமும். பிறரை தொலைவிலிருந்து அழைத்துப் பேசப் பயம் படும் தொலை பேசியில்தான் எத்துனை வகையும், விதமும். இந்தப் பட்டியில் எண்ணிலடங்காமல் நீண்டு கொண்டே செல்லும் பட்டியல் என்பதை யாரும் நன்கறிவர்.
இப்படியாக தேவையை மீறிய ஆசைகள் எனும் மனோ இச்சைகளுக்கு அடிமைப் பட்டதன் விலைவாக உருவாகிய அதிகரித்த தேவைகளை நிறைவு செய்ய முடியாத வருமை நிலைதான் இன்று பரவலாக காணப் படுகிறது. சரியாகச் சொன்னால் இதை வருமை என்ற வரையரைக்குள் சேர்க்கவே முடியாது (ஒருகாலத்தில் ஆடைக்கு இருந்த பஞ்சத்தை நினைத்துப் பார்த்தால் இது சரியாக விளங்கும்).
இந்த வருமையின் விளைவுகள் இரண்டு. ஒன்று தமது தேவைகளை நிறைவு செய்துகொள்ளக் கூடியளவு வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் தானாக வரியவர்களாக மாறி விடுகின்றனர். மற்றொன்று தமது தேவைகளுக்கு அப்பால் செல்வமும் வசதி வாய்ப்பும் உள்ளவர்கள் பிறருக்கு கொடுக்க முடியாத நிலையுடைய ஏழைகளாக மாறி விடுகின்றனர். இதுதான் இன்றய காலத்தின் வருமையின் யதார்த்தம் என்பதை அழ்ந்து சிந்திப்போர் மறுக்க முடியாது.
உண்பதற்கு இரண்டு பேரீச்சம் பழங்கள் மாத்திரமே இருக்கின்ற போது அதில் ஒன்றை பிறருக்கு கொடுக்கக் கூடியவர்களாக சஹாபாக்கள் இருந்தனர் என்ற கதையைச் சொல்லி, சொல்லி தமனது தேவைகளை கட்டுப் பாடின்றி அதிகரித்துக் கொண்டு, அதனை பூர்த்தி செய்வதன் பின்னால் அலையக் கூடிய நிலையை மார்க்கம் என்றும், அல்லாஹ் ஹலாலாக்கியதை சம்பதிப்பதற்கான முயற்சி என்றும் கட்பனை செய்துகொண்டு வாழும் மனிதர்களின் பரிதாப நிலையை என்னவென்றுதான் சொல்வது. உள்ளதைக் கொண்டு திருப்தி அடைவதே மிகப் பெரும் செல்வம் எனச் சொல்லும் போது அதில் தேவைகளை வரையறுத்துக் கொள்வதும் உள்ளடங்கும் என்பதை எத்துனை பேர்தான் அறிந்து வைத்திருப்பர்.
இந்த வருமைக்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன.
ஒன்று: வசதியுள்ளவர்களும் வசதியற்றவர்களும் தமது தேவைகளை வரையறை செய்து கொள்ள வேண்டும்.
அடுத்தது: வசதியுள்ளவர்கள், தமது தேவைக்கு மேலதிகமாக உள்ள கிடப்பில் போட்டு கிடக்கும் பொருட்கள் அனைத்தையும் தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
அதேவேளை வசதியற்றவர்களும், வசதியாக இருந்து பின்னர் பிரச்சிணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளவர்களும், பிறரது உதவியை எதிர்ப்பார்த்து பிறரிடத்தில் கை நீட்டிக் கொண்டிராது தமது முழுமுயற்சியையும் வெளிப்படுத்தி, ஹலாலானதை தேடுவதில் ஈடுபடவேண்டும். அதைச் செய்தால் அவர் என்ன நினைப்பார், இதைச் செய்தால் இவர் என்ன நினைப் பார் என்ற கற்பணைகளையும், ஷைத்தானின் உபதேசங்களையும் / ஊசலாட்டங்களையும் உதரித்தள்ளி விட்டு, அல்லாஹ் ஹலாலாக்கிய எதையும் செய்து பொருள் சம்பாதிக்க முயற்சிக்கும் மனோ நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தேவைகளை வரையருத்துக் கொள்ளல்:
தேவைகளை வரையருத்துக் கொள்வது என்பது எல்லாக் காலங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்றப் படவேண்டியதொரு முக்கிய அம்சமாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ள ஒரு முக்கிய விடயம்தான் எல்லா சஹாபாக்களை விடமும் மக்களுக்கு அதிகம் கொடை கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பது. அதேவேளை படுத்து எழும்பினால் பாயின் அச்சுகள் உடம்பில் பதிந்திருக்கக் கூடிய ஒரு சாதரன கட்டிலையே அவர்கள் உறங்குவதற்கு பயன்படுத்தினார்கள். இது நபி (ஸல்) அவர்கள் தனது தேவைகளை வரையருத்துக் கொண்டு எப்படி எழிமையாக வாழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதரணமாகும். அதுமாத்திரமல்ல இப்படி தேவைகளை வரயருத்துக் கொண்டு வாழ்வது மிக முக்கியமான சுன்னாவாகும். சுன்னாவை பின்பற்றுவது என்ற பெயரில் பலரும் அர்த்தமற்ற எத்தனையோ செயல்களில் ஈடுபடும் இந்த காலத்தில் தேவைகளை வரையறுத்துக் கொண்டு எழிமையாக வாழ்வது என்ற சுன்னா அதிகம் வழியுறுத்தப் படவேண்டியதாகும். வீடு, வாகனம், திருமனச் சடங்குகள் என்ற பட்டியலை போட்டுக் கொண்டு போனால், அவகளில் எழிமையைக் கடைப்பிடிப்பதனூடக எவ்வளவு செல்வத்தை மிச்சம் பிடிக்களாம், அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் மூலம் எவ்வளவு பிரயோசனமிக்க விடயங்களை தனக்கும் சமூகத்துக்கும் செய்யலாம். இந்த சுன்னவை ஹயாத்தாக்குவது பற்றி நாம் அதிகம் கரிசனை செலுத்த வேண்டும். தாடியை நீளமாக வளர்த்துக் கொண்டு நான் சுன்னாவைப் பின்பற்றுகிறேன் என்று காட்டிக் கொள்வதை விடவும், வசதியிருந்தும் சுன்னாவின் அடிப்படையில் எழிமையக் கடைப்பிடித்து வாழ நான் உள்ளத்தைப் பக்குவப் படுத்திக் கொண்டுள்ளேன் என்று எண்ணக்கூடிய நிலை உருவாக வேண்டும்.
அவ்வாரே வாழ்க்கை வசதி வாய்ப்புக்கள் குறைந்தவர்களும். பிறரைப் பார்த்துப், பார்த்து தமது தேவைகளை அதிகரித்துக் கொண்டு, பிறரிடத்தில் கையேந்தும் நிலையை உருவாக்கிக் கொள்வதை விட்டு விட்டு, தமது தேவைகளை இயன்றளவு வரையருத்துக் கொண்டு அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கையேந்தக்கூடியவர்களாக கண்ணியமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். தொழுகைக்காக தக்பீரைக் கட்டியவுடன் “உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம் என பலமுறை சொல்லி விட்டு” பள்ளிக்கு வெளியே வந்தவுடன் பிறரிடத்தில் கையேந்தும் மனோ நிலை, அல்லது பிறரிடத்தில் உதவிகளை எதிர்ப்பர்க்கும் மனோ நிலை இவர்களுக்கு எப்படி வருகிறது என்பது கேள்விக்குறிய விடயமாகும். ஒன்றில் தொழுகையில் அவ்வாறு பொய்யுரைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது தொழுகையில் சொன்ன அந்த விடயத்தை வாழ்க்கையில் பின்பற்றப் பழகிக் கொள்ள வேண்டும். இறண்டும் கெட்டான் நிலையில் வாழ்வது எந்த விதத்திலும் பயன் தரப் போவதில்லை என்பது நன்கு விளங்கிக் கொள்ளப் படவேண்டும்.
மேலதிகமாக கிடப்பில் போடப் பட்டுள்ள பொருட்களை பகிர்ந்தளித்தல்:
வசதி வாய்ப்புள்ளவர்கள் ஏதோ பல காரணங்களினால் தாம் விலை கொடுத்து வாங்கிய பொருள்களை ஓரிருமுறை பயன்படுத்தி விட்டு அவற்றை தாமும் பயன் படுத்தாமல், பயன் படுத்தக் கூடியவர்களுக்கும் கொடுத்துதவாமல் வீனாக கிடப்பில் போட்டு வைக்கின்றனர். இது சந்தேகத்திற் கிடமின்றி அல்லாஹ் தந்த அருளை துஷ்பிரயோகம் செய்வதாகும். “உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்ய வேண்டாம்,” அல்குர்’ஆன் (7:31) “வீண்விரயம் செய்யக்கூடியவர்களை அல்லாஹ் வெறுக்கிறான்..” (6:141) என்று அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகிறான். ஆனால் இந்த விடயம் பற்றி எத்துனை பேர் அக்கரை காட்டுகின்றவர்களாக உள்ளனர்.
இன்று எத்தனையோ இயக்கங்கள் தங்களுக்கு மத்தியில் போட்டி போட்டுக்கொண்டு மார்க்கப் பணியில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்கள் இந்த அல்-குர்’ஆன் வசனத்தை சமூகம் பின்பற்றக்கூடிய வழிவகைகளை செய்யாமை ஒரு பெரும் குறையே. அதனடிப்படையில் பாவித்த பொருட்களை (2ன் ஹேன்ட்) ஒன்று சேர்த்து தேவையுள்ளவர்களுக்கு விநியோகிக்கும் ஒரு முறை உருவாக்கப் படுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இதுவிடயமாக முதற்கண் பாவித்த பொருட்கள் பற்றி ஒரு பட்டியல் அதாவது யாரிடம் என்ன பொருட்கள் இருக்கின்றன என்ற ஒரு பட்டியல் (டேடா பேஸ்) உருவாக்கப் படவேண்டும். அதன் பின்னர் தேவையுடைவர்கள் அதைப் பார்ர்து தங்களுக்கு தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து கொள்ளும் அமைப்பு ஏற்டுத்திக் கொடுக்கப் படவேண்டும்.
முயற்சி:
இன்று சமூகத்தில் பரவி வரும் வருமைக்கு அடுத்த தீர்வாக முயற்சியைக் கொள்ளலாம். இன்று பரவி வரும் வருமைக்கு முக்கிய காரணம் முயற்சி இன்மையாகும். அது இன்றய / நவீன காலத்தின் ஒரு உளவியல் நோய் என்று சொன்னால் கூட அது மிகையாகாது. நவீன தொலை தொடர்பு சாதனங்கள், குறிப்பாக பேஸ்புக் போன்ற வற்றினூடா பிறரிடத்தில் உள்ள வசதி வாய்ப்புக்களை கண்டறிந்தவர்கள் அவைகளை எண்ணி எண்ணி அங்களாய்த்தவர்களாக, சோர்வடைந்து எதையும் செய்ய முடியாத மனோ நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். இதன் விலைவாக சிறிதாக எதையும் செய்து சாதாரணமாக வாழ்வோம் என்ற மனோ நிலையை இழந்து பெரிதாக செய்ய வெண்டும் என்ற எதிர்ப்பர்பில் எதையும் செய்யாமல் இருந்து விடுகின்றனர். இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம், வளங்களில் சிறந்த வளம் மனித முயற்சியாகும். வளங்களில் சிறந்த வளம் மனித வளம் அந்த வளத்தைப் பயன்படுத்தியே இன்று சீனா உலகித்தில் தலை நிமர்ந்த நாடாக மறியுள்ளது என்பது பொதுவாக சொல்லப் படும் ஒரு விடயமாகும். ஆனால் சீனாவின் உண்மையான வளம் மனித முயற்சியாகும். சீனாவில் இருக்கும் அதிகரித்த மனிதர்கள் ஏனய வளங்களை விழுங்கிவிடும் மனிதர்களாக அல்லாமல் அதிகம் முயற்சியுள்ளவர்களாக உள்ளனர். அதுவே சீனாவின் வளமாகும். (ஐரோப்பியர்களும் இத்தகையவர்களே) இதை பாடசாலை ஆசியர்கள் முதல் கலாசாலை விரிவுரையாளர்கள் வரை சரிவர விளங்கிக் கொள்வதும் அதை, விளக்கிச் சொல்வதும் காலாத்தின் தேவையாகும். அந்த முயற்சியே யாரும் முன்னேர முக்கியமானதாகும். மனித முயற்சியின் விசேடத் தன்மை என்னவென்றால் முயற்சி செய்யச், செய்ய அது விருத்தி அடைந்து கொண்டே செல்லும் என்பதாகும். ஒருமுறை தவறு செய்தால் அதிலிருந்து பாடம் பெற்று அடுத்த முறை சிறப்பாக செய்யக் கூடிய ஒரு விருத்தி மனித முயற்சிக்கு மாத்திரமே இருக்கிறது என்பது யாறு ஆழ விளங்க்கிக் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.
இஸ்லாத்திலும் மனித முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது என்பது யாறும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விடயமாகும். இஸ்லாத்திலே மிக முக்கிய கடமையான, யாரும் செய்வதற்கு ஆவலாக காத்திருக்கும் “ஹஜ்” கடமையில் உள்ள ஒரு அம்சம் “சஃயு” என்பதாகும். “சஃயு” என்றால் தமிழில் முயற்சி என்று பொருள். (அது அன்று ஹாஜர் அம்மையார் அவர்கள் உணவு/தன்னீர் தேடி செய்த முயற்சியைக் குறித்துக் காட்டும் கிரிகையாகும்) அதேபோல் இன்னும் எத்தனையோ குர்’ஆன் வசனங்கள் மனித முயற்சியின் பின்னாலேயே இறைவனின் உதவி உள்ளது என்பதை போதித்துக் கொண்டிருக்கின்றன (பார்க்க அல்குர்’ஆன் 53:39; 19:25, 2:60, 6:117,160 26:63). ஆனால் இன்றய முஸ்லீம்களின் உண்மை நிலையைச் சொன்னால் சுவர்க்கத்துக்கு போகு முன்னரே சுவர்கத்தில் வாழ்வதாக கட்டபனை செய்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. எல்லாம் தனது காலடிக்கு வரவேண்டும். வாழைப் பழத்தை உரித்து வாயில் ஊட்டிவிட வேண்டும் என எதிர்ப்பர்த்திருக்கும் நிலைதான் பரவலாக உள்ளது. இந் நிலை முற்றாக மாறவேண்டும். அதை மாற்ற சமூகத்தில் செல்வாக்குள்ளவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். முயற்சியே அற்ற சோம்பேரிகளாக மாறிவரும் இன்றய சமூகத்தில் எனது உள்ளத்தை அடிக்கடி உருத்தக் கூடிய ஒரு காட்சி என்னவென்றால்: தொலை பேசிகள் அனுமதிக்கப்படாது என்ற விளம்பரத்தையும் தாண்டி, தனது தொலைபேசிகளை பள்ளிவாயலுக்குள் எடுத்துச் செல்லக் கூடியவர்கள், பள்ளிவாயலுக்குறிய கண்ணியம் பற்றி சிறிதும் கவலையின்றி வருகின்ற தொலை பேசி அழைப்புகளுக்கு தொழுத இடத்தில் இருந்து கொண்டே பதிலழிப்பர். அந்த இடத்திலிருந்து சற்று எழுந்து சென்று முறையாக தனது தொலைபேசியை பயன்படுத்த விருப்பமில்லாத அளவு சோம்பேரிகளாக, பள்ளிவாயலின் கண்ணியத்தைப் பாழ்படுத்தக் கூடியவர்களாகவே இவர்கள் உள்ளனர். தொழுகைக்கு வரக்கூடிய, மார்க்கக் கடமைகளை சரிவரச் செய்யக் கூடிவர்களே இப்படியான சோம்பேரிகளாக மாறி வருகின்றனர் என்றால் அதை என்னவென்று சொல்வது? இந்த சோம்பேரித் தனத்திற்கு விரும்பியோ விரும்பாமலலோ முற்றுப்புள்ளி வைக்கப் படவேண்டும். நான் இவர்களிடத்தில் கேட்க விரும்புவது, முஸ்லீம்களாகிய நாம் அல்லாஹ்வின் மாலிகைக்கு கண்ணியம் காட்டாவிட்டால் அந்நியர்களா அந்த கண்ணியத்தைக் கொடுக்கப் போகிறார்கள்……………………………………..?
வாழ்க்கையில் முயற்சியற்று அங்களாய்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்: வருடம் முழுவதும் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக மழை பொழியாது. நாட்டில் எல்லா பாகங்களிலும், ஒரே நேரத்தில் மழை பொழியாது. அது போலத்தான் மனித வாழ்விலும் எல்லாக் காலங்களிலும் எல்லாருக்கும் ஒரேமாதிரியாக வசதி வாய்ப்புகள் ஏற்படாது. எனவே தனக்குறிய காலம் வரும் வரை தன்னால் இயன்ற முயற்சிகளை சோம்பரமின்றியும், யாருக்கும் அஞ்சாமலும் தொடர்ந்தும் செய்து வரவேண்டும். “கத்ர்” என்பது ஒரு முஸ்லிமின் ஈமானின் அம்சங்களின் ஒன்றாகும். அது மனிதனை சோம்பேரியாக்குவதற்கான விடயமல்ல. மாறாக மனிதனை தொடர்ந்தும் முயற்சியுள்ளவனாக ஆக்குவதற்கான போதனையாகும். இறைவன் வகுத்த படியே யாதும் நடக்கும். நாம் நம்மால் இயன்ற முயற்சிகளை தொடர்ந்தும் செய்வோம் என்ற மனோ நிலையும், மன உறுதியும் உள்ளவர்களாக தொடர்ந்தும் உழைக்கக் கூடிய நிலை உருவாகவேண்டும்.
இந்த அம்சங்களை கடைப் பிடிப்பதுடன், அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வதையே இஸ்லாம் போதிக்கிறது. யாரெல்லாம் அவ்வாரு தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களது முயற்சிக்குறிய பலன்களை அல்லாஹ் கொடுத்தருள்வானாக……..!
ஒரு முஸ்லிமின் உண்மை நிலை, அவன் எப்பொழுதும் ஒரு போர் வீரனைப் போல் இருப்பான். எந்த சந்தர்ப்பத்திலும் அல்லாஹ் றஸூலின் கட்டளையை அமுல் படுத்த தயாராகவே இருப்பான். இந்த நிலை சாதாரனமாக வந்து விடாது (ப’இதா பரக்த பன்ஸப்)
No comments:
Post a Comment
We value your feed back