யதார்த்தங்கள்
இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைப் போதனைகளாகிய புனித குர்'ஆன் வேத நூலும், ஹதீஸ் எனும் நபி போதனைகளும் உலக வாழ்க்கை பற்றியும்
அதன் யதார்த்தங்கள் பற்றியும் மிகமிக அதிகமான அம்சங்களை தன்னகத்தே பொதிந்துள்ளன. மேலும் வரலாற்றில் தோன்றிய
முஸ்லீம் மற்றும் முஸ்லிமல்லாத அறிஞர்களும் இதுவிடியமாக அதிகமான அம்சங்களை எழுதி
வைத்துச் சென்றுள்ளனர். இவை அனைத்தும் எத்தகையன
வென்றால், தண்ணீரிலே மிதக்கின்ற
ஒரு வீட்டின் பண்புகளை பற்றரிய விளக்கங்கள் போன்றதாகும். (அந்த வீட்டை ஒரு கப்பல் எனக்
கருதிக் கொண்டாலும் பரவாயில்லை). அந்த வீட்டின் தன்மைகளை சரியாக விளங்கிக் கொண்டால்தான்
அதில் எப்படி வாழ்வது என்பது புரியும். ஆனால் அந்த வீட்டின் தன்மைகளை சரியாக விளங்கிக்
கொள்ளாமல் அதில் எப்படி வாழ்வது எனப் போதிப்பது போன்றதே யதார்த்தங்களை விளங்காமல் மார்க்கம்
போதிப்பதுமாகும்.
உலக வாழ்க்கை பற்றி இஸ்லாம் போதிக்கின்ற யதார்த்தங்கள் அக்குவேறு ஆணிவேராக விளக்கப்
பட்டுள்ளனவாதலால் அவை பற்றியெல்லாம் மேலும் விளக்கங்கள் சொல்வது காலத்தை கொள்ளை கொண்டுவிடும்.
எனவே தற்கால யதார்த்தங்கள் சில பற்றியே இங்கு நோக்கப் படுகிறது.
காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருப்பதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுவார். அதன்படி நாம் வாழுகின்ற காலம் இஸ்லாம் தோன்றிய ஆரம்ப
காலத்தை ஒத்ததாக அமைந்திருப்பதை ஆழ்ந்து நோக்குகின்றவர்கள் கண்டு கொள்வர். கொலை,
கொள்ளை, வழிப்பறி, மது, மாது, சூது என்பன வித்தியாசமான
பெயர்களில் அரங்கேற்றப் படுகின்ற அதேவேளை, சட்ட திட்டங்களும் கட்டமைப்புகளும் கட்டுப்பாட்டுகளும் அமுலில் இல்லாமலில்லை. இச் சட்டங்களிற் சில இஸ்லாத்துடன் ஒத்துச் செல்லக்
கூடியன. இன்னும் சில இஸ்லாத்தின் போதனைகளுடன் ஒவ்வாதனவாகும்.
முஸ்லிம் சமூகத்தை எடுத்துடுக் கொண்டாலும்கூட இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னால், எவ்வாறு கிறிஸ்தவர்கள் பிளவுபட்டு சர்ச்சைக்குள்ளாகி தங்களுக்கு மத்தியில் பிணங்கிக்
கொண்டனரோ, அதைவிடவும் ஒருபடி தாண்டி முஸ்லீம்கள் சச்சைகளில் ஈடுபட்டு பிளவுபட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்.
தெளிவான திருக்குர்'ஆனை வேதநூலாகாக் கொண்டவர்களான முஸ்லீம்களின் நிலையே
இப்படியென்றால், மற்றவர்களில் நிலை எப்படி இருக்கும் என்பது கேட்கவும் வேண்டுமா? இது
சமூக விடயங்களில் ஈடுபடுகின்றவர்கள் கட்டாயம் சிந்தித்துணர்த்துக்கொள்ள வேண்டிய விடயமாகும்.
ஜனநாயகம் என்றும், மனித உரிமைகள் என்றும், சட்டதிட்டங்கள் என்றும் பேசுகின்றவர்கள், சந்தர்ப்பம் வருகின்றபோதெல்லாம்
அவற்றை தங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்வர். இந்த போலியான ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டயாப்புகள் என்பனவற்றை மையமாகக் கொண்டு தங்களது
செயற்பாடுகளையும், செயற்திட்டங்களை வகுத்துக் கொள்வதை விட்டும் முஸ்லீம்
சமூக சிந்தனையாளர்கள் முதற்கண் தங்களை தூரமாக்கிக் கொள்ள வேண்டும். (அதன் அர்த்தம்
அவற்றை மறுப்பது அல்ல மாறாக அவற்றுக்குப் பகரமான இஸ்லாமிய போதனைகளை அடிப்படையாகக் கொள்ள
வேண்டும்).
அவ்வாறே, பண்பாடுகள் என இனங்காணப்
படுகின்ற அம்சங்களும், மேற்சொன்ன ஜனநாயக அம்சங்கள்
போலவே அமைந்து காணப் படுகின்றமையும் இன்னொரு யதார்த்தமாகும்.
ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான பெரும்பான்மை எனும் அம்சம் பெரும்பான்மை இனத்தவர்களுக்கே
சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் கொண்டு தருவதாக அமைந்துள்ளமை எழுதப் படாத சட்டமாகும்.
அதன் அடிப்படையில் பெரும்பான்மைக்குள் இருக்கும் ஒரு சிறுப்பாண்மைக் கும்பல் சிறுபான்மை
இணத்தவர்களின் உரிமைகளில் கைவைக்கும் போது அந்த பெருமப்பான்மை வேறு வழியின்றி அமைதிகாக்கும்
என்பதும் யாவரும் தெரிந்திருக்க வேண்டிய இன்னொரு யதார்த்தமாகும்.
மாறாக, ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்கு தெளிவான வழிமுறைகளும், வரையறைகளும்
போதிக்கப் பட்டுள்ளன. “யார் ஒரு தீமை நடைபெறுவதைக்
காண்கிறாரோ அவர் தன்னால் இயன்றவாறு அதைத் தடுக்க முயலாட்டும்” என்பது இஸ்லாம் முன்வைக்கும்
போதனையாகும். அதன் அடிப்படையில் அவன் செயற்படுவது அவனுக்கு நன்மை தரும் என்பது அவனது
நம்பிக்கையாகும். இதே நம்பிக்கை முஸ்லீம் அல்லாத ஒருவனிடம் இருக்க வேண்டுமென நாம் எதிர்ப்பார்ப்பது
முறையாகுமா? இதுபோன்ற யதார்த்தங்களை நாம் விளங்கிச் செயற்படுவது அவசியமாகும்.
அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு மனிதனிடத்திலும் காணப்படுகின்ற ஒரு முக்கிய பலவீனமாகிய "நான்" எனும் திமிரு இக்காலத்தில் முஸ்லீம் அல்லாதவர்களிடத்திலும், முஸ்லிம்களிடத்திலும், பெருத்து பூதாகரமாக உருவெடுத்திருப்பதையே அன்றாட செய்திகள் ஊடாக நாம் தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இந்த "நான்" எனும் திமிரை அடக்குவது என்பது வேறு, அதனை இனங்கண்டு செயற்படுவது என்பது வேறு. அதற்கிணங்க பெரும்பான்மை இனத்தவரிடத்தில் காணப்படக் கூடிய "நான்" மற்றும் "எனது" ஆகிய அம்சங்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டிய ஒரு நிலைமை காணப்படுகிறது. அதற்கு அப்பால் சிலர் நல்ல முறையில் நடந்து கொள்வது பாராட்டத் தக்க விடயமாக கருதப் படவேண்டுமே அல்லாமல் அத்தகையவர்களை மையமாகவைத்தது மற்றவர்களிடமும் அதே செயற்பாட்டை எதிர்ப்பார்ப்பது புத்திசாதூர்யமாகாது.
இதுபோன்ற இன்னோரன்ன யதார்த்தங்களுக்கு அப்பால், ஒரு முஸ்லிமிடத்தில்
கணக்கு கூடிய "நான்" எனும் திமிரை அடக்கக் கூடிய ஒரு சூழல் சிறுபான்மையாக
அவன் வாழும்பொழுது வாய்க்கிறது எனும் யதார்த்தமும்
யாவரும் தெரிந்து பயன்பெறத்தக்கதொரு அம்சமாகும். இந்த "நான்" எனும் அகம்பாவத்தை
அடக்குவது இஸ்லாம் மார்க்கத்தில் எந்தளவு வழியுறுத்தப் பட்டுள்ளது எனும் விடயம் விரிவு கருதி இங்கு தவிர்க்கப் படுகிறது.
எப்படி ஒரு ஏழைக்கு பணக்காரனை விடவும் பாவம் செய்யாமல் இருக்க வாய்ப்பு அமைகிறதோ, அதுபோல்
சிறுபான்மை இனமாக வாழும் ஒரு முஸ்லிமுக்கு "நான்' எனும் அகங்காரத்தைக் கட்டுப் படுத்தி வாழும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கமைய, பண்பாகவும் பணிவாகவும் அவன் தனது உரிமைகளை பெற்றுக்
கொள்ள முயற்சிப்பதும், அதேவேளை, எல்லோரது பொது உரிமைக்கான போராட்டங்களில்
பங்குகொள்வதும் போற்றத்தக்கதொரு வழிமுறையாகும் என்பது இங்கு சந்தர்ப்பம் கருது சுட்டிக்
காட்டப் படுகிறது.
No comments:
Post a Comment
We value your feed back