Tuesday, February 8, 2022

கூட்டுப் புழு

கம்பளிப் பூச்சியின் ஒரு வளர்ச்சிக்கு கட்டமே கூட்டுப்புழுவாகும். அதேவேளை கம்பளி இல்லாத ஆனால் கம்பளிப் பூச்சியின் நிலையிலுள்ள புழுக்களும் உண்டு. எனவே கம்பளிப்பூச்சி என்பதை விடவும் கூட்டுப்புழு என்பது ஒரு பொதுச் சொல்லாக அமைவதால் கூட்டுப்புழு என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது.

இயற்கை அல்லது இறைவனது படைப்பியல்பின் ரகசியத்தை எடுத்தியம்பும் ஒரு உன்னத படைப்பினமே இந்தக் கூட்டுப்புழுவாகும். மனிதன் பரிணாம வளர்ச்சிக்கண்டான் எனக் கூறும் விஞ்ஞனாம் அதை நிரூபிக்க பல்வேறு உயிரினங்களில் காணப்படும் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது. அதைவிடவும் சிறப்பான ஒரு அம்சமே இந்தக் கூட்டுப்புழு சமாச்சாரம் எனலாம். அதன்படி இறைவனது படைப்பினங்கள் என்றும் நிலையாக இருப்பதில்லை, மாறாக தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த மாறுகின்ற பிரபஞ்சத்தில் வாழ்கின்ற மனிதன் ஆழ்ந்து சிந்தித்துணரத்தக்க ஒரு அம்சமே கூட்டுப்புழுவாகும். முட்டையாக இருந்து பின்னர் புழுவாக பரிணமித்து பின்னர் கூட்டுப்புழு எனும் சைவற்ற நிலையடைத்து கடைசியாக சிறகு முளைத்து பறக்கும் பூச்சியாக பரிணமிப்பதே இந்த கூட்டுப்புழுவாகும்.

இவ்வாறு பரிணமிக்கின்ற அந்த கூட்டுப்புழு எப்போதாவது தான் முட்டையாக இருந்திருக்கலாமே என எண்ணியிருக்குமா. அப்படி அது எண்ணியிருந்தால் ஒருநாள் சிறகு பெற்று பிறந்திருக்க முடியுமா.  அந்த கூட்டுப்புழுவின் போராட்டத்தை தெரிந்து கொட்டு பாதையில் போகும் போது ஒருநாள் எரிக்கும் வெயிலில், கருங்கல் பாதையில் ஒரு கூட்டுப்புழு போராடிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அதைக் காப்பாற்றாமல் அங்கிருந்து என்னால் நகர முடியவில்லை என்பது கதையல்ல, நிதர்சனமாகும். அந்த சின்னஞ் சிறு புழுவிலிருந்து மனிதன் கற்றுக்கொள்ளும் படிப்பினைகள்தான் எத்துணை எத்துணை,,,, (பார்க்க அல்குர்'ஆன் 12:105).

இப்படியாக தாம் என் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை சிறுகூட எண்ணிப்பார்க்காமல் தொடர்ந்தும் அது வரையறுக்கப்பட்ட அந்த நாட்களை கடந்து செல்கிறது. அதற்கு சோதிடமும் தெரியாது. அபசகுனம் பற்றியும் எதுவும் தெரியாது. தனக்கு விதிக்கப்பட்ட வழிமுறையை திருப்தியுடன் ஏற்று அது தனது முயற்சியைத் தொடர்கிறது.

அந்த பின் குறிப்பிட்ட திகதி வந்தவுடன் பாதுகாப்பான ஒரு இடத்தை நாடிச் சென்று ஓய்வெடுக்கிறது. ஒய்வு களைந்து விழித்துப்பார்க்கும்போது அங்கே சிறகுகள் முளைத்திருக்கின்ற. மீண்டும் புது உலகிற்கு கம்பீரமாகப் புறப்படுகிறது.

மனித வாழ்க்கையும் இப்படித்தான் பல கட்டம் கட்டமாக அமைந்திருக்கிறது. ஒரு கட்டத்திலிருந்து மற்ற கட்டத்திற்கு போன மனிதன் கடந்து போன கட்டத்திலுள்ள நிம்மதியை நாடி தனது நிகழ்கால நிம்பதியைத் தொலைத்தத்துக்கொள்வது நியாயமாகுமா...? அந்தக் கூட்டுப்புழுவைப் பார்ந்தாவது கொஞ்சம் ஞானம் பெற்றுக்கொள்ளக் கூடாதா? ஐயோ,,,,,, சிலர் அவ்வப்போது தமது இன்னுயிரையே மாய்த்துக் கொள்கின்றனரே. இந்த முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது. கூட்டுப்புழுவுக்கு இருக்கின்ற துணிச்சல் கூட இல்லாமல் போய்விட்டதே,,,,,,,,,,,,,,,,,,

 காலங்கள் மாறும்

கணிதங்கள் மாறும்

 

தையொன்று பிறந்தால்

வழியொன்று பிறக்கும்

 

போனதையே எண்ணீ

ஏங்காதே,,,,,,,,

 

கால சூழ்நிலை மாறும் வரை கஷ்டங்களை சகித்துக் கொள்வதற்கும் பொறுமை என்று சொல்லப்படும்.

அவ்வாறே சிலபோது இருக்கின்றவற்றை இழந்து விடுவதற்கு நேரிடும் அல்லது இருக்கின்றவை இழந்து போகும். இத்தகைய நிலைகள் ஏற்படும் போதும் புதிய நிலைகளை முழு மனதுடன் ஏற்று புது வாழ்வை மகிழ்ச்சியுடன் கடத்துவதற்கு துணிவு கொள்வதும் அவசியமாகும். அதுவே அடுத்த கட்டத்தை அடைவதற்கு அஃதாவது சிறகு முளைத்து பறப்பதற்குத் துணையாகவும் அமையலாம்.     

 பார்க்க பொறுமை 

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...